சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க விஜயகலா முயற்சி: நீதிபதி இளஞ்செழியன்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை விடயத்தில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்ட விதத்தை நீதிபதி இளஞ்செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இக் குற்றத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை காப்பாற்றுவதற்கு விஜயகலா முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இச் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதென நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சுவிஸ்குமாரை தப்பிக்க வைப்பதற்கு யாழ் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் உடந்தையாக செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கும் நீதிபதி இளஞ்செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.