யாழ் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு நிதி உதவி!

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை (6.9 பில்லியன்) இந்தியா வழங்கவுள்ளது. இந்த நிதிஉதவியில் பிராந்திய மற்றும் வணிக துறைமுகமாக காங்கேசன்துறை பரிணமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியுதவிக்கான உடன்படிக்கை இரு நாட்டு பிரதிநிதிகளினால் புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.