ஊரவனின் சிந்திக்க வைக்கும் சிறுதுளிகள்!

ஒரு பெரியவருக்கு நான்கு ஆம்பிளை பிள்ளைகள் இருந்தனர்,அவர்கள் நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அந்த பெரியவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் நால்வரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் அந்த பெரியவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்டி, நால்வரின் புத்தியையும்  கூர்மையாக்க ஒரு போட்டியை வைத்தார்.

நால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். தனது மூத்த மகனை அழைத்து நான்கு கொம்புகளையும் ஒன்றாக கட்ட சொன்னார். பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து, அந்த ஒன்றாக கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் அந்த ஒன்றாக கட்டிய கொம்புகளை உடைக்க   முடியவில்லை. பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.

ஒற்றுமையோட பலம் என்ன என்று இப்போ நால்வரும் தெரிஞ்சு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று அந்த பெரியவர் சொன்னார். நீங்கள் நாலு பேரும் நான்கு கொம்புகளை போலதான். நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் உங்களை வீழ்த்த முடியாது என்று கூறினார். நான்கு மகன்களும் ஒற்றுமையின் பலம் என்ன என்று நன்கு புரிந்து கொண்டார்கள். அன்றிலிருந்து நால்வரும்  சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள். ஆகவே ஒரு நாட்டுக்கோ இல்லை ஒரு ஊருக்கோ ஒற்றுமை என்பது கண்ணும் இமையும் போன்றது.

இப்ப ஊரவன் என்ன சொல்ல வாறன் என்று நீங்களே சிந்தியுங்கள்!!!

அன்புடன் -ஊரவன்-