
வசாவிளானைப் பிறப்பிடமாகவும் , சென்னை மடிப்பாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி நீல்பிள்ளை இராசமணி அவர்கள், சென்னை மடிப்பாக்கத்தில் 08 06 .2025 அன்று இறைவனடி சேர்ந்தார் . அன்னார் காலம்சென்ற திரு வல்லிபுரம் நீலபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும் , காலம் சென்ற திரு, திருமதி நாகலிங்கம் சின்னத்தங்கம் அவர்களின் புதல்வியும், காலம்சென்ற திரு, திருமதி வல்லிபுரம் நாகமுத்து தம்பதியினரின் மருமகளும் ஆவார்.
அன்னார் காலம் சென்றவர்களான திரு பொன்னுத்துரை, திருமதி கனகம்மா , திரு வேலுப்பிள்ளை , திரு ஐயாத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார். அன்னார் காலம் சென்றவர்களான திருமதி நல்லப்பிள்ளை வேலுப்பிள்ளை, திருமதி அன்னமுத்து – கல்லடி சுப்ரமணியம், திரு குலநாயகம், திரு இராசநாயகம், திரு சிங்கநாயகம் , திருமதி பொன்னுத்துரை நாகேஸ்வரி, திரு நாகேந்திரம் , திருமதி தங்கமலர் , மற்றும் திருமதி ஐயாத்துரை பரமேஸ்வரி (கனடா) ஆகியோரின் மைத்துனியுமாவார் . அன்னாரின் ஈமைக்கிரியைகள் சென்னை மடிப்பாக்கத்தில் இடம்பெற்று (12 06 .2025 வியாழக்கிழமை) சென்னை மடிப்பாக்கம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு